
டி-20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரானமயங்க் அகர்வால் உடன் ட்விட்டரில் கலந்துரையாடினார். அப்போது கங்குலி கூறும்போது, ‘‘டி-20மிக முக்கியமானது, நான் எனது விளையாட்டை மாற்றியிருப்பேன். இந்த வடிவிலான ஆட்டம் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதற்கான உரிமையை வழங்குகிறது. ஐபிஎல் முதல் ஐந்து ஆண்டுகளில் நான் விளையாடி இருந்தாலும், மேலும் டி-20 விளையாடுவதை நான் விரும்பி இருப்பேன். நான்டி-20 வடிவத்தை அனுபவித்திருப்பேன்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments