
2020 அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
திங்களன்று நடந்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு முன் கூட்டியே எதிர்பார்க்கப்பட்டதும், திரைமறைவில் இதை நடத்தக் கூடாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் கொஞ்சம் பிசிசிஐ-யும் கூட வேலை செய்தன. ஆனால் கரோனா வைரஸ்தான் உ.கோப்பை ஒத்திவைப்புக்குக் காரணம். ஐபிஎல் இதே கரோனா காலக்கட்டத்தில் நடக்கும் என்று தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments