குவஹாத்தி: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தை சூறையாடியுள்ளது தென்மேற்குப் பருவமழை. கடந்த சில நாட்களாகவே பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் இருப்பிடங்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். மக்களின் இயல்பு முற்றிலும் முடங்கியுள்ளதோடு மட்டுமல்லாது வன விலங்குகளும் கூட வெள்ளநீரில் சிக்கி பலியாகியுள்ளன.

from Oneindia - thatsTamil