கரோனாவால் பாதிக்கப்பட்ட தாயின்இறுதி நேரங்களை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பாசமிக்க மகன் பார்க்கும் படம் வைரலாகி வருகிறது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள பெய்ட் அவா நகரில் உள்ள மருத்துவமனையில் 73 வயதான ரஸ்மி சுவைதி என்ற மூதாட்டி ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பும் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நோய் தொற்று அபாயம் இருப்பதால், அவரைப் பார்க்க வந்த 30 வயதான ஜிகாத் அல்-சுவைதி என்ற அவரது மகன், தாயைப் பாரக்க அனுமதிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {