
மான்செஸ்டரில் நடைபெறும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 92/4 என்று திணறி வருகிறது.
ஆட்ட முடிவில் ஆலி போப் 46 ரன்களுடனும் ஜோஸ் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். பாக் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும் ஷாஹீன் அஃப்ரீடி மற்றும் யாசிர் ஷா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments