
“கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) என்ற கரோனா வைரஸ், இயற்கையாக உருவானதே அன்றி மனிதர்களால் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டதல்ல’’ என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் வைஸ் கூறினார்.
சென்னையில் உள்ள டிஎன்க்யூ டெக்னாலஜீஸ் தொழில்நுட்பப் பதிப்பகமும் அமெரிக்காவில் உள்ள ஜனேலியா ஆய்வு மையமும் இணைந்து ‘டிஎன்க்யூ - ஜனேலியா இந்தியா கோவிட்-19 - 2020’ (TNQ-Janelia India COVID-19 Seminar 200) என்ற தலைப்பில் தொடர் இணையவழி கருத்தரங்குகளை ஒருங்கிணைத்திருக்கின்றனர். கோவிட்-19 குறித்தும் சார்ஸ் கோவிட்-19 குறித்தும் உலகளவில் ஆராய்ச்சிகளை இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்களுக்குக் கொண்டு செல்வதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments