
பூமியின் சுற்றளவு தூரத்துக்கு இந்தியர் ஒருவர் நடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் தனது சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார்.
பஞ்சாபில், பிறந்து, அயர்லாந்தில் வசித்து வருபவர் வினோத் பஜாஜ். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. சென்னையில் பணியாற்றிய அவர், 1975-ம் ஆண்டு ஸ்காட்லாண்டில் குடியேறினார். பின்னர் அவர் அயர்லாந்தின் லிமெரிக் நகரில், குடும்பத்தினருடன் நீண்ட காலமாக வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற பொறியாளரான இவர் வணிக ஆலோசகர் பணியையும் மேற்கொண்டு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments