
கே.எல்.ராகுலின் அரைசதம், கெயில் புயலின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களி்ல் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments