நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘மன்கட் அவுட்’விஷயத்தில் தன் மனநிலை மாற்றத்தை வெளிப்படுத்தியது ஆச்சரியமளிப்பதாக இருந்தது.

கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் கேப்டனாக இருந்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை அவர் மன்கட் முறையில் அவுட் செய்தார், பட்லரும் 2 அடி கிரீசைத் தாண்டி பவுலிங் செய்யும் முன்பே வந்தார், அப்படி முன்னேறி வந்தால் பவுலர் வீசாமலேயே ரன் அவுட் செய்யலாம் அது விதிப்படி சரிதான், ஆனால் கிரிக்கெட்டில் இது ஆட்டத்தின் மீதான வீரரின் நல்லுணர்வுக்கு எதிரானது என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்