கடந்த முறை இந்திய அணியிடம் தொடரை இழந்த போது அணியில் இழந்த வீரர்கள் பலருக்கு, அந்தத் தோல்வியே இம்முறை வெற்றி பெற ஊக்கம் தருவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

2018-19ஆம் ஆண்டு 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது. சொந்த மண்ணில் ஒரு ஆசிய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தொடரை இழப்பது அதுவே முதல் முறை. முக்கியமாக இந்தத் தொடரின் போதுதான் பாலை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்டீவ் ஸ்மித்தும், வார்னரும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். இருவரும் கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் ஆடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்