
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
33 வயதான தியாகி 17 வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். இந்திய அணிக்காக 4 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments