
ஆஸ்திரேலியாத் தொடருக்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்கட்டப் பயிற்சியை நேற்று தொடங்கினர்.
ஆஸ்திேரலியாவில் 2 மாதங்கள் பயணம் மேற்கொண்டு இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும்டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக துபாயில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அங்கிருந்தபடியே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments