
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20 அன்று பதவிஏற்பார். ஆட்சி மாறும் முன்பே காட்சிகள் மாறத் தொடங்கி விட்டன. தோற்ற அதிபர் வெற்றி பெற்றவருடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்து, அடுத்த சில நாட்களில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்து, அதற்குப் பிறகு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக தன் தோல்வியை ஒப்புக் கொள்வது அமெரிக்க மரபு. தானே வெற்றி பெற்றதாகவும், தேர்தல் தொடர்பாக வழக்குகள் தொடரப் போவதாகவும் டொனால்டு ட்ரம்ப் கூறி வருவதை மிகப் பெரும்பாலோர் பொருட்படுத்தவில்லை.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்க பெருநகர்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், திரளாகக் கூடி கொண்டாடத் தொடங்கினர். வெள்ளை மாளிகை அருகே நடந்த கொண்டாட்டத்தைப் பார்த்தஉளவுத் துறை அதிகாரி ஒருவர் ‘‘வன்முறையைஎதிர்பார்த்த எங்களுக்கு இந்த கொண்டாட்டத் தைப் பார்க்கும் போது நிம்மதியாக இருக் கிறது’’ என்று கூறியது நாட்டின் உணர்வை பிரதிபலித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments