கொல்கத்தா: மே. வங்கத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்ளாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மம்தா பானர்ஜியை வீழ்த்தியே தீர வேண்டும் என்று குறிவைத்துப் பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments