
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் என்று பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் விலகி பெரும் பின்னடைவுகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. இந்த சூழலில் கோலி இல்லாத நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கை பலப்படுத்தும் பொருட்டு கே.எல். ராகுல் களமிறக்கப்படலாம் என பேச்சு எழுந்தநிலையில் காயத்தால் ராகுல் விலகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments