
நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள், சில சமயம் விளையாட்டுப் போட்டிகளை பாதிப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் 1980-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது நடந்தது.
1979-ம் ஆண்டில் சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பி வந்தன. ஆனால் இதையெல்லாம் சோவியத் யூனியன் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இந்தச் சூழலில்தான் 1980-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை மாஸ்கோ நகரில் நடத்த சோவியத் யூனியன் தயாராகி வந்தது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததால், சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின. ஆனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி அங்கு நடைபெறுவது உறுதியானதும் சில நாடுகள் அதைப் புறக்கணிக்கலாமா என்று யோசித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments