சிட்னியில் வரும் 7-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் பெரும்பாலான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜனின் பந்துவீச்சும், யார்க்கர் வீசும் துல்லியமும் பிசிசிஐ தேர்வுக்குழுவினரை ஈர்த்தது. இதனால், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீரராகப் பறந்த நடராஜன், அங்கு மாறிய சூழலாலும், வீரர்களின் காயத்தாலும், ஒரு நாள், டி20 தொடரில் இடம்பெற்று தனது முத்திரையைப் பதித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்