
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 88 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 0, சேதேஷ்வர் புஜாரா 21, விராட் கோலி 0, ரோஹித் சர்மா 161, அஜிங்க்ய ரஹானே 67, ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பந்த் 33, அக்சர் படேல் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அக்சர் படேல் 5, இஷாந்த் சர்மா 0, குல்தீப் யாதவ் 0, மொகமது சிராஜ் 4 ரன்களில் நடையை கட்டினர். தனது 6-வது அரை சதத்தை அடித்த ரிஷப் பந்த் 77 பந்துகளில், 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments