
சென்னையில் நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினின் அபாரமான சதத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
அபாரமாக பேட் செய்த அஸ்வின் 134 பந்துகளில் சதம் அடித்து டெஸ்ட் அரங்கில் தனது 5-வது சதத்தை பதிவு செய்து 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments