கிரிக்கெட் உலகில் அதிரடி மன்னனாக விளங்கிய சனத் ஜெயசூர்யா, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாள் இன்று. 1991-ம் ஆண்டு இதே நாளில்தான் (பிப்ரவரி 22) நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெயசூர்யா அறிமுகமானார்.

1969-ம் ஆண்டு இலங்கையின் கடற்கரை நகரமான மடாராவில் பிறந்தார் ஜெயசூர்யா. சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட அவர், பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, பல பரிசுகளை வென்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல்முறையாக 1988-ம் ஆண்டில் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணிக்காக ஆடிய ஜெயசூர்யா, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் 1989-ம் ஆண்டு முதல் ஆடினாலும், டெஸ்ட் போட்டியில் ஆட 1991-ம் ஆண்டுவரை அவர் காத்திருக்க வேண்டி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்