
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை சச்சின் டெண்டுல்கர் நிரூபித்த நாள் பிப்ரவரி 24. கடந்த 2010-ம் ஆண்டு இதே நாளில்தான் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து, இச்சாதனையை படைத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை எழுதினார். இச்சாதனையை படைத்தபோது சச்சினின் வயது 37.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே குவாலியர் நகரில் நடந்த ஒருநாள் போட்டியில்தான் இந்த சாதனையை படைத்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போட்டியில் பார்னல் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி, தான் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸுக்கு தயாராக இருப்பதை உணர்த்தினார் சச்சின்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments