பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ரிச்சி பெனாட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நாள் இன்று (பிப்ரவரி 12).

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 1930-ம் ஆண்டு ரிச்சி பெனாட் பிறந்தார். உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில், அவரது அப்பா லூயிஸ் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அதனால் சிறுவயதிலேயே ரிச்சி பெனாட்டுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரிச்சி பெனாட், 1952-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரிச்சி பெனாட், 2,201 ரன்களை எடுத்ததுடன் 248 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 1964-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்