
மதரீதியாக வீரர்களைத் தேர்வு செய்திருந்தால் நான் பயிற்சியாளர் பதவியிலருந்து நீக்கப்பட்டிருப்பேன். ராஜினாமா செய்திருக்க மாட்டேன். மதரீதியாகச் செயல்படுவதாக என்னைக் குற்றம் சாட்டுவது வேதனையாக இருக்கிறது என்று உத்தரகாண்ட் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments