
2019-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்ற ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணி வீரர்கள் முகமது நவீத், ஷாய்மான் அன்வர் பட் ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தடை உத்தரவு கடந்த 2019, அக்டோபர் 16-ம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் முறைப்படி ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments