
கே.எல்.ராகுலின் பிரமாதமான சதம், ரிஷப் பந்த்தின் அசுரத்தனமான பேட்டிங், கோலியின் பொறுமை ஆகியவற்றால் புனேவில் பகலிரவாக நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்கம் சிறப்பாக இல்லாத நிலையில், நடுவரிசையில் ராகுல், கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் ஆகியோரின் பேட்டிங் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தியது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 5-வது சதத்தை நிறைவு செய்து 114 பந்துகளில் 108 ரன்கள்(2 சிக்ஸர்,7 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments