ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட கெய்ரன் பொலார்டின் அதிரடி ஆட்டத்தால், ஆன்டிகுவாவில் நடந்த இலங்கை அணிக்குஎதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதுமட்டுமல்லாமல் இலங்கை வீரர் தஞ்செயா எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டும் முத்தாய்ப்பானது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது 132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 13.1ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என மே.இ.தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்