சேவாக் பாணியில் அதிரடியாக ஆடி ரிஷப் பந்த் அடித்த சதம், வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் ஆகியவற்றால், அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால், ரிஷப்பந்த், சுந்தர் கூட்டணி நங்கூரமிட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்