ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பிலிப் 14-வது ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்ததையடுத்து அவருக்குப் மாற்றாக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை விலைக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

2020ம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் அறிமுகமாகிய ஜோஸ் பிலிப், 5 போட்டிகளில் 78 ரன்கள் சேர்த்தார். இப்போது பிலிப்புக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாவிட்டாலும், 12 முதல்தரப்போட்டிகளில் விளையாடி 3 அரை சதங்களை விளாசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்