
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடியதைப் பார்க்கும்போது வீரேந்திர சேவாக் இடது கையில் ஆடுவதைப் போலத் தோன்றியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் வென்றது. இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்தின் ஆக்ரோஷமான ஆட்டம் இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பாகவே ஆடி வருகிறார். இதனால் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments