
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று அகமதாபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்திய அணி தற்போது அகமதாபாத் நகரில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று 4-வது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. வரும் 4-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments