ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்கான நீதியை வேண்டி கெஞ்சும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், கடந்த 2018ம் ஆண்டு, பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த கௌரவ் ஷர்மா என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

from Oneindia - thatsTamil