
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவி தகுதி பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானிதேவி, அண்மையில் ஹங்கேரியில் நடைபெற்ற உலககோப்பை வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்று கால் இறுதியில் தோல்வி கண்டார். இருந்தபோதும் சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின்படி (ஏஓஆர்) அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கதகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments