
இந்த ஆடுகளத்தில் என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடுவதில் தவறு செய்துவிட்டோம். அந்தத் தவறுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 125 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments