
டி20 போட்டியில் மோசமாகச் செயல்பட்டதற்காக தன்னை விமர்சித்தவர்களுக்கு சதம் அடித்து சைகை மூலம் இந்தியஅணி வீரர் கே.எல்.ராகுல் பதில் அளித்துள்ளார்.
புனேயில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் ராகுல் அடித்த 5-வது சதமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments