ஐஸ்வால்: ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்து எழுவதைப் போல இன்று மியான்மர் ரத்த உறவுகளுக்காக மிசோரம் மாநிலம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சியில் உச்சகட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. நாள்தோறும் துப்பாக்கிச் சூடு, படுகொலைகள் அரங்கேறுகின்றன. தாய்லாந்து எல்லையில் உள்நாட்டு ஆயுதக் குழுவுடன் ராணுவம் யுத்தம் நடத்துகிறது. இதனால் எல்லைகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுகின்றன.  

from Oneindia - thatsTamil