
நம் முன்னோர்கள், வேட்டையாடுவதற்காக முதலில் பயன்படுத்திய ஆயுதம் ஈட்டியாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அதை வைத்து நிச்சயம் தங்களுக்குள் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஈட்டி எறியும் போட்டி எப்போது தோன்றியது என்பதற்கான குறிப்புகள் ஏதும் வரலாற்றில் இல்லை. ஆனால் கிமு 708-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பென்டத்லான் போட்டியின் ஒரு அங்கமாக ஈட்டி எறியும் போட்டி இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து ஆதிகாலத்து விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறியும் போட்டியும் ஒன்று என்பது நிரூபணமாகி உள்ளது. நவீன ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பிரிவில் 1908-ம் ஆண்டிலும், பெண்கள் பிரிவில் 1932-ம் ஆண்டிலும் ஈட்டி எறியும் போட்டிகள் அறிமுகமாகி உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments