
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதயத்துடிப்பு மகேந்திரசிங் தோனிதான். 200 போட்டிகளுக்கும் மேலாக அவர் இன்னும் விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்சிங் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அபாரமாகப் பந்து வீசிய சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments