இந்தியாவில் நவம்பர் மாதம் கரோனா வைரஸ் 3-வது அலை வர வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, நவம்பரில் இதேபோன்று கரோனா வைரஸ் தாக்குதல் நேர்ந்தால், போட்டியைத் தொடர்ந்து நடத்துவதிலும், வேறு இடத்துக்கு மாற்றுவதிலும் சிக்கல் ஏற்படும். ஆதலால், போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மாதத்துக்குள் அதற்கான முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்