
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என இன்னும் முழுமையாகப் புரியவில்லை. நாங்கள் கிரிக்கெட் விளையாடிய அந்தப் பொன்னான நாட்களை இனிவரும் தலைமுறையினரிடம் காணமுடியாது என்று மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
மே.இ.தீவுகள் அணி 1975, 1979ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதன்பின் இதுவரை ஒருநாள் போட்டிக்கான எந்த உலகக் கோப்பையையும் வாங்கவில்லை. ஆனால், 33 ஆண்டுகளுக்குப் பின், 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், அதன்பின் 2016ஆம் ஆண்டும் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments