
2021 ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, சக வீரரும் நியூஸிலாந்து வீரருமான கெயில் ஜேமிஸனை டியூக்ஸ் பந்தின் மூலம் பந்துவீசக் கேட்டுக்கொண்டார். அதை ஜேமிஸன் மறுத்து, கோலி விரித்த வலையில் ஜேமிஸன் சிக்காமல் தப்பித்துவிட்டார் என்று நியூஸிலாந்து வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வரும் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியும், இந்திய அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டியூக் பந்துகள் பந்துவீச்சுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாகவே கெயின் ஜேமிஸனை பந்துவீச கோலி கேட்டபோது அதற்கு ஜேமிஸன் மறுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments