
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதனை டெல்லியில் இருந்தபடியே தொலைகாட்சியில் பார்வையிட்ட பிரதமர் மோடி இந்திய அணியினர் வருகையை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. டோக்கியோவில் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments