
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று உணவு இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் 3-வது விக்கெட் வீழ்ந்து விராட் கோலி பெவிலியன் திரும்பியவுடன் ரஹானே களமிறங்கினார். இவரும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து மிக நிதானமாக இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்தனர். கிட்டத்தட்ட 15 ஓவர்கள் இந்த இணை நிலைத்து, 35 ரன்களைச் சேர்த்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments