ஹரித்வார்: மகாளய அமாவாசை நாளான நேற்று ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கட்டுப்பாடுகள் எதனையும் கடைபிடிக்காமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டதால் மீண்டும் கொரோனா பரவல் மையமாக ஹரித்வார் உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது.

from Oneindia - thatsTamil