
ஜோகன்னஸ்பர்: ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து விலக, கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பேற்றார். அதன்படி டாஸ் வென்ற ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். ராகுல் - அகர்வால் இணை ஓரளவு விளையாடியது. மயங்க் 26 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி ஆட்டம் கண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments