பெங்களூரு: 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில்இந்திய அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்குமும்பை இந்தியன்ஸ் அணியும், தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன. வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வானிடு ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது.

இரண்டாவது நாள் ஏலம் இன்று தொடங்கியது. முதல் செட்டில் பேட்ஸ்மேன்கள் ஏலம் விடப்பட்டனர். முதல்நபராக தென்னாபிரிக்க வீரர் மார்க்கரம் ஹைதராபாத் அணியால் ரூ.26 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்திய வீரர் ரஹானே ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு செல்கிறார். மந்தீப் சிங்கை ரூ.1.1 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்