
பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கியவுடன் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் தவானின் பெயர் தான் முதலில் வாசிக்கப்பட்டது. பஞ்சாப் அணி அவரைப் போராடி ஏலத்தில் எடுத்துள்ளது. தவானை ஏலத்தில் எடுக்க கடும் போட்டா போட்டி நிலவியது. கடந்த முறையும் ஏலத்தில் ஷிகர் தவானின் பெயர்தான் முதலில் ஏலத்தில் வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments