லிஸ்பன்: 'உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி' எனச் சொல்லி அண்மையில் பிறந்த தனது மகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் பதிவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகில் அதிக கோல்களை பதிவு செய்தவர் போர்ச்சுகல் நாட்டு வீரர் ரொனால்டோ. தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 37 வயதான அவருக்கு ஆறு குழந்தைகள். இதில் அண்மையில் அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண், ஒரு பெண் என பிறந்த அந்த இரட்டையர்களில் ஆண் குழந்தை பிரசவத்தின் போதே உயிரிழந்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்