
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் உலகின் தலை சிறந்த பினிஷர்களில் ஒருவராக அறியப்படுபவர். அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி டொமஸ்டிக் கிரிக்கெட் களம் வரை தனது அணிக்காக கிரீஸில் கடைசி வரை இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தவர் தோனி. 2011 - 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது இன்னிங்ஸை அதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். உலகின் சிறந்த பவுலர்களின் பந்துவீச்சை இறுதி ஓவரில் தெறிக்கவிடுபவர். அப்படி ஒரு சம்பவத்தை தான் நடப்பு ஐபிஎல் சீசனில் நேற்று மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் செய்திருந்தார் 'தல' தோனி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments