மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இப்போது ஓய்வு மிகவும் அவசியம் எனமுன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. அந்த அணியின் முன்னாள் கேப்டனான அவர் நடப்பு தொடரில் அதிகபட்சமாக ஒரே ஒரு போட்டியில் 48 ரன்கள் எடுத்திருந்தார். ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார் அவர். இதில் இரண்டு டக் அவுட்கள் அடங்கும். இத்தகைய சூழலில் தான் ரவி சாஸ்திரி இதனை வலியுறுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்