கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு வேந்தர்களாக முதல்வரே பதவி வகிக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக சார்பு ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகங்களில் குறுக்கீடுகள் செய்வது தொடர் கதையாகிவிட்டது.

from Oneindia - thatsTamil